×

கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து, சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் மினி வேனில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணம் செய்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Tags : Kallakurichi, road accident
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...