கொக்கு மருந்து கலந்த தவிடு தின்று 11 ஆடுகள் பலி

கூடுவாஞ்சேரி:  ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம், அறிஞர் அண்ணா காலணி, நேரு தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி ராணி(60). இவருக்கு சொந்தமான வெள்ளாடுகள்-10 மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரின் வெள்ளாடு-1 மற்றும் கன்றுக்குட்டி-1 ஆகியவை நேற்று மாலை மேற்படி பகுதியின் அருகாமையிலுள்ள கிளாம்பாக்கம் ஏரியில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது மேற்படி ஏரிக்கரையின் மறுபக்கம் நெற்பயிர் விளைவித்த நிலத்தின் உரிமையாளர்களில் யாரோ ஒருவர் கொக்கு மருந்து அதனுடன் தவிடு சேர்த்து ஆங்காங்கே வைத்ததில், அதனை மேய்ந்த ஆடுகள் மற்றும் கன்றுக்குட்டி ஆகியவை சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது.  இது சம்பந்தமாக கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: