×

சந்திர கிரகணத்தால் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு தாமதம்: ஆடி முதல் நாள் என்பதால் பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சந்திர கிரகணத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நேற்று 30 நிமிடம் தாமதமாக திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் ஆடி மாத பூஜைகளுக்காக நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. நேற்று முதல் ஆடி மாத சிறப்பு பூஜைகள் தொடங்கியது. வழக்கமாக மாத பூஜைகளின்போது தினமும் காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். ஆனால் நேற்று அதிகாலை சந்திர கிரகணம் ஏற்பட்டதால், 30 நிமிடம் தாமதமாக காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பம்பை ஆறு திசைமாறி ஓடியதில் பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் சேதமடைந்தன. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்து பம்பைக்கு பக்தர்களின் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. பம்பையில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கல் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் பக்தர்கள், ேகரள அரசு பஸ்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பகதர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்ல அனுமதிக்கப்பட்டன. நேற்று ஆடி 1ம் தேதி என்பதால் பக்தர்கள் அதிகம் குவிந்திருந்தனர்.


Tags : Lunar Eclipse, Sabarimalai Iyappan Temple, Devotees
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்