தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையம் 13ம் கட்ட விசாரணை மதுரை வக்கீல் ஆஜர்

தூத்துக்குடி:  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு அமைத்த  நீதிபதி  அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர்  விசாரணை ஆணையம் ஏற்கனவே 12 கட்டங்களாக விசாரித்துள்ளது. 13ம் கட்ட விசாரணை நேற்று முன்தினம்   துவங்கியது. மதுரையைச் சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் உட்பட 4 பேரிடம் நேற்று  விசாரணை நடந்தது.

Related Stories: