கோவை: கோவையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க போக்குவரத்து போலீசாருக்கு சட்டையில் பொருத்தி கொள்ளும் வகையில் 70 கண்காணிப்பு கேமரா நேற்று வழங்கப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீசார், உயிர் அமைப்பு சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு சட்டை காலரில் பொருத்தும் வகையிலான 70 கண்காணிப்பு கேமரா வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கலந்து ெகாண்டு கண்காணிப்பு கேமராக்களை வழங்கினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கோவை நகரில் பொது இடங்களில் மக்களின் நடவடிக்கை, போக்குவரத்து விதிமுறை மீறலை கண்காணிக்க உயிர் அமைப்பு சார்பில் 20.50 லட்ச ரூபாய் நிதியுதவியில் 70 கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டது.