சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட மத்திய அமைச்சர் மற்றும் வேதாந்தா நிறுவனம் மீது தமிழக அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்குமா என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தத்தில் ஓ.என்.ஜி.சி.யும், வேதாந்தா நிறுவனமும் கையொப்பமிட்டிருக்கிறது. இதை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கூறியதற்கு அமைச்சர் சி.வி. சண்முகம் நேரிடையாக பதில் கூற தயாராக இல்லை. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க ஆய்வு செய்ய, உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறார்.