×

டிரான்ஸ்பார்மர் சுவிட்ச்களை தடையின்றி வழங்க வேண்டும்: மின்வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: டிரான்ஸ்பார்மர்களுக்கான சுவிட்ச்களை தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக மின்சார வாரியம் நுகர்வோர்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக ஆங்காங்கு டிரான்ஸ்பார்மர்களை அமைத்துள்ளது. இதன் மூலமாகவே அதிகமான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட ஒருசில இடங்களில் மட்டும்  தரைவழி கேபிள் பதிக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்படுகிறது.இதனால் டிரான்ஸ்பார்மர்களின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதன் மேல்பகுதியில் ஒரு சுவிட்ச் அமைக்கப்பட்டிருக்கும். இந்த சுவிட்ச்சை கொண்டே, துணை மின்நிலையத்திலிருந்து டிரான்ஸ்பார்மருக்கு வரும் மின்சாரத்தை  நிறுத்தவும், தொடரவும் முடியும்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட சுவிட்ச்சுக்கு பல இடங்களில் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தடையில்லாமல் வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், ‘‘டிரான்ஸ்பார்மர்களுக்கான சுவிட்ச்கள் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மாதந்தோறும் பராமரிப்புப் பணிக்காக மின்சார விநியோகம் நிறுத்தப்படும் போது, முக்கியமாக இந்த சுவிட்ச்சில் தான்  ஆய்வு நடத்தப்பட்டு, பழுதுகள் இருந்தால் சரி செய்யப்படும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்பட்சத்தில் பல இடங்களில் சுவிட்ச் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  சில பகுதிகளில் சம்பந்தப்பட்ட சுவிட்ச்சுகள் முறையாக பராமரிக்கப்படாமலும் உள்ளது. இதனால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Transformer, Unblock switches, power supply
× RELATED பருவமழையால் விளைச்சல், வரத்து...