அண்ணா நகர்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ₹1.5 கோடி மோசடி செய்த வாலிபரை காருடன் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் அந்த வாலிபரால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. சென்னை மீஞ்சூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (28). இவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் 1.5 கோடி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் கொடுத்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ந்நிலையில் கடந்த 9ம் தேதி கார்த்திகேயன் தனது அக்கா ஷாலினி (30) என்பவரை சென்னை ஸ்கைவாக் பகுதி சாலையில் இறக்கிவிட்டு, காரில் சைதாப்பேட்டைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை.