பாகல்பூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் 15 வயது சிறுவன். தற்போது, ஜார்கண்டில் வசித்து வருகிறான். இவனுடைய தந்தை ஒரு அரசு அதிகாரி. ஜார்கண்டில் உள்ள தியோகரில் பணியாற்றி வருகிறார். அவரது தாய், பாட்னாவில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் ஜனாதிபதிக்கு அந்த சிறுவன் ஒரு கடிதம் எழுதியுள்ளான். இதை பார்த்த ஜனாதிபதி அலுவலகம், அதை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. கடிதத்தில் அந்த சிறுவன் கூறியுள்ளதாவது:
எனது பெற்றோர் இருவரும் மோசமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதனால், எனது படிப்பும் பாதிக்கப்படுகிறது. எனது தந்தைக்கு புற்றுநோய் இருக்கிறது.