சென்னை: சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.எஸ்.சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஐகோர்ட்டில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் ராஜாஜி சாலையில் ரிசர்வ் வங்கி முன்பாக ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இப்பாதை வழியாகத்தான் ஐகோர்ட்டு நீதிபதிகள், சென்னை கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கார்களில் செல்கின்றனர். சுங்கப்பாதைக்கு மேலே ரெயில்கள் செல்லும் போது சுரங்கப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது ரயிலில் இருந்து மனிதக்கழிவுகள் விழுகின்றன. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.