சென்னை: வேலூர் மக்களைவை தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரி, எஸ்பியுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.வேலூர் மக்களவை தொகுதியில் திடீரென தேர்தல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, அங்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி மத்திய அரசு முன்னாள் அதிகாரி பி.முரளிகுமாரை சிறப்பு செலவினப் பார்வையாளராக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு அங்கு தேர்தல் நடத்தப்படுவதை கண்காணிப்பதுடன், பண பலத்தை கட்டுப்படுத்தி தடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.