குல்பூஷன் விவகாரம் இந்திய அரசுக்கு கிடைத்த வெற்றி ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:பாகிஸ்தான் அரசு இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய அரசின் முயற்சிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும்.  இந்திய  கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் சென்றபோது பாகிஸ்தான் அரசு தவறான குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி கைது செய்தது.இந்த வழக்கில் இப்போது வந்திருக்கும் தீர்ப்பு இந்திய அரசுக்கு நியாயமானதாக வழங்கப்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தான் அரசு நியாயத்துக்கு கட்டுப்பட்டு, நீதிக்கு உட்பட்டு இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: