திருவண்ணாமலை: நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதை கண்டித்து செய்யாற்றில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து செய்யார் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு கட்சிசார்பற்ற விவசாயிகள் இந்த போராட்டத்தை நடத்தினர். மேலும் கடந்த ஆண்டு வரை 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நூறு நாள் வேலை திட்டத்திற்கு தற்போது 5 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனை கண்டித்து விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் போட்டு பிட்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர். மேலும் இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் கூறியதாவது, வேளாண் நிதியானது குறைவாக 2 சதவீதம் ஒதுக்கப்படுவதால் கிராமப்புற மக்கள் பல தொழில்களுக்காக நகர்ப்புறம் நோக்கி செல்வதாகவும், மேலும் விவசாயிகள் சிலர் விவசாய கடன்களால் இறந்து போனதாகவும் அவர் தெரிவித்தார்.