சென்னை: எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்தது குறித்து சிபிசிஐடி விசாரிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். மே 26ல் அனுப்பிரியா எனும் மாணவி எஸ்ஆர்எம் பல்கலைக்கழக 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். மே 27ல் அனித் சவுத்ரி எனும் மாணவன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் விடுதியில் மர்ம மரணம் அடைந்தார். கடந்த 15 ந் தேதி தர்ஷன் எனும் மாணவன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.