கோவை : புதிய கல்விக்கொள்கை குறித்து கோவையில் முன்னறிவிப்பின்றி கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கேட்பு கூட்டம் நடந்த அரங்கம் முன் கு.ராமகிருஷ்ணன் தலைமையில த.பெ.தி.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னறிவிப்பின்றி இனிமேல் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தக்கூடாது என்று த.பெ.தி.க.வினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.