கரூர்: கரூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த அனிதா என்பவரின் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர். மனைவியை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கணவர் ஜீவானந்தம், மாமியார் லட்சுமி கைது செய்யப்பட்டுள்ளனர். ஜீவானந்தம் கல்லூரி விரிவுரையாளராகவும், மாமியார் லட்சுமி அரசுபள்ளி தலைமை ஆசிரியராகவும் உள்ளனர்.