புதுச்சேரி: புதுச்சேரியில் பறவைகள் சரணாலயமாக விளங்கும் ஊசுடு ஏரி வறண்டு போனதால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து புதுச்சேரியின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான ஊசுடு ஏரியானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறண்டு காணப்படுகிறது. சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடல் போல் பரந்து விரிந்து காட்சியளித்த ஏரியானது தற்போது வறண்டு குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை தொடர்ந்து ஊசுடு ஏரி வறண்டுபோய்விட்டதால் நவம்பர் மாதம் அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்காக 4 செயற்கை தீவுகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர். மேலும் 4 செயற்கை மணல் திட்டுகளையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.