சென்னை : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் புவியரசன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுவதாவது; மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு 12 முதல் 20 செண்டி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும். கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 செ.மீ., கமுதி, பள்ளிப்பட்டு, பெரியகுளம், 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.