சென்னை: நீட் மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி மத்திய அரசிடம் பதில் இல்லை என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். மசோதா நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தான் மத்திய அரசு பதிலா அளித்துள்ளதே தவிர தமிழக அரசின் கடிதத்துக்கு பதில் அளிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.