சென்னை: சென்னை அயனாவரத்தில் எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் திருட ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. பணம் எடுக்க சென்ற நபர் ஏடிஎம்மில் நம்பர் பதிவிடும் இடத்தில் சிறிய கேமரா இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார். எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் ஸ்கிம்மர் மற்றும் கேமராவை பொருத்தியது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.