சொல்லிட்டாங்க...

திமுக வெற்றி பெற்று என்ன சாதிக்கப் போகிறது என்று வீண்வாதம்- விதண்டாவாதம் செய்தவர்களுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தரமான வாய்ப்பூட்டு போடும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஆளும் கட்சியினர் தலையீட்டில் பல போலி  சங்கங்கள் உருவாக்கப்பட்டு, குடிமராமத்து திட்டப் பணிகள் என்ற பெயரில்  மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். -மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

அஞ்சல்துறை தேர்வுகளில் நடந்த குழப்பங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட மத்திய அரசு, இனி போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் நடத்த வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்.

தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து போராட்டம் நடத்த, எதிர்ப்புகளை தெரிவிக்க, விமர்சனங்களை முன்வைப்பதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

Related Stories: