புதுடெல்லி: தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேற்கு வங்க மாநில அரசு குறி வைத்து தாக்கப்படுவதாக குற்றம்சாட்டி, மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மேற்கு வங்கத்தில் தேர்தலின் போது நிகழ்ந்த அரசியல் வன்முறைகள் குறித்து உறுப்பினர்கள் மீண்டும், மீண்டும் பேச அனுமதிக்கப்படுவதாகவும், இதன் மூலம் மேற்கு வங்க மாநில அரசு குறி வைத்து தாக்கப்படுவதாகவும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்பி.யான சுதீப் பாந்தோபாத்யாய, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், நாடாளுமன்ற விதி 41 கீழ், ஏற்கனவே பதில் அளிக்கப்பட்ட விவகாரங்கள் பற்றி மீண்டும் கேள்வி எழுப்பக் கூடாது என குறிப்பிடப்பட்டு இருந்தும், தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் வன்முறை குறித்து, மீண்டும் மீண்டும் 3 முறை கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன.