×

பயிற்சி பெற்று வந்திருக்கிறோம் அமைச்சர் உதயகுமார்

சென்னை: பேரவையில் நேற்று மானியக் கோரிக்கை விவாதத்தில் திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன்(திமுக) பேசும் போது, ‘‘இந்த தொகுதியில் நான் இரட்டை வெற்றி பெற்றிருக்கிறேன்’’ என்றார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயகுமார்,‘‘  உறுப்பினர் இரட்டை வெற்றி பெற்றதாக கூறினார். முதலில் நடந்த தேர்தலில் 43000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டீர்கள்.  நீதிமன்றம் வழங்கியது ஒரு டெக்னிக்கல் தீர்ப்பு. திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 32 ஊராட்சிகளிலும் கலெக்டரை நேரில் அழைத்து சென்று மக்கள் குறை தீர் முகாம்களை நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர்கள் நாங்கள். ஏட்டிக்கு போட்டி பேசினால் அதற்கு பதிலளித்து பேசும் வகையில் தகுந்த பயிற்சி பெற்று தான் இங்கு வந்திருக்கிறோம்’’ என்றார்.



Tags : Minister Udayakumar
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...