×

‘ராட்சசி’ படத்தை தடை செய்ய வேண்டும்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் இளமாறன் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 5ம் தேதி ‘ராட்சசி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அரசு பள்ளிகளை கேவலப்படுத்தும் நோக்கத்தோடும், அரசு பள்ளி ஆசிரியர்களை  அசிங்கப்படுத்தி அவதூறு பரப்பும் விதமாக படத்தில் காட்சிகள் உள்ளது. அரசு பள்ளிகளை சீர்த்திருத்துவதாக கூறி சேற்றை வாரிப்பூசுகிறது.

படத்தில் அரசு பள்ளியில் தன் குழந்தையினை சேர்க்க வரும் பெற்றோரை உதாசீனப்படுத்தும் காட்சி” அரசு பள்ளி எங்கும் குப்பை அங்கு வேலைசெய்யும் ஆசிரியர்கள் எப்போது வருவார்கள் எப்போது போவார்கள் என்று தெரியாது” என்ற காட்சிகள் அமைந்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் மீது பாலியல் மற்றும் சாதி குற்றச்சாட்டு பல்வேறு தொழிலில் ஈடுபடுகிறார்கள் உள்ளிட்ட தவறான வசனங்களை எழுதி இதன் மூலம் அரசு பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இழிவுப்படுத்தி உள்ளனர்.  எனவே, ராட்சசி படத்தை தடை ெசய்ய ேவண்டும். இல்லையேன்றால் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனே நீக்க ேவண்டும்.






Tags : Why should the image
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...