கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ்

திருவனந்தபுரம்: சபரிமலை   ஐயப்பன் கோயிலுக்கு சாலை மற்றும் ரயில் மார்க்கமாக மட்டுமே செல்ல முடியும்.  விமானத்தில் வரும் பக்தர்கள் திருவனந்தபுரம் அல்லது கொச்சியில்  இறங்கி  சென்று வருகின்றனர்.  இந்நிலையில்  விமான பயணிகளின் வசதிக்காக தனியார் நிறுவனம் ஒன்று  கொச்சியில் இருந்து சபரிமலைக்கு  ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்க  தீர்மானித்துள்ளது. கொச்சி விமான நிலையத்தில்  இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காலடியில் இருந்து நிலக்கல்லுக்கு  ஹெலிகாப்டர்  இயக்கப்படுகிறது. ஹெலிகாப்டரில் பைலட்  உள்பட 4 பேர் மட்டுமே பயணம் செய்ய  முடியும். வரும் நவம்பர்  17ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை ெஹலிகாப்டர் இயக்கப்படுகிறது.

Related Stories: