வீட்டில் துப்பாக்கி, குண்டு பதுக்கி வைத்திருந்த ரவுடி மாட்டு சேகரை பிடிக்க தனிப்படை ஆந்திரா விரைந்தது: போலீசார் தீவிரம்

சென்னை: பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி மாட்டு சேகர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். சென்னை அண்ணாநகர், ஒய் பிளாக், 2வது தெருவை சேர்ந்தவர் மாட்டு சேகர் (52). பிரபல ரவுடி. இவரது மனைவி அனுராதா (40), அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார்.இவர், கடந்த 12ம் தேதி அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் மாட்டு சேகர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அண்ணாநகர் உதவி கமிஷனர் குணசேகரன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி மாட்டு சேகர் அறையில் துப்பாக்கி மற்றும் கத்திகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அவரது அறையில் லைசென்ஸ் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள், 2 பட்டா கத்திகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் ரவுடி மாட்டு சேகர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் ஆந்திராவுக்கு விரைந்தனர்.

Related Stories: