* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் 60 வயதுக்கு குறைந்தவர்களாகவும், ஐசிசி உறுப்பினர் நாட்டு அணிகளுக்கு குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சியாளராக பணிபுரிந்தவர்களாகவும், 30 டெஸ்ட் போட்டி அல்லது 50 ஒருநாள் போட்டியில் விளையாடியவர்களாகவும் இருக்க வேண்டும் என பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளது.
* ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர் விஜய்வீர் சித்து 3வது தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சக வீரர் ஆதர்ஷ் சிங்குடன் இணைந்து 25 மீட்டர் பிஸ்டல் குழு பிரிவில் நேற்று களமிறங்கிய விஜய்வீர் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த தொடரில் இந்திய அணி இதுவரை மொத்தம் 16 பதக்கங்களை அள்ளியுள்ளது.