சென்னை: சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் யோகேஷ் (20). எம்ஐடியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அடையாறு பாலத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நண்பருடன் பைக்கில் சென்றபோது, எதிரே பட்டினப்பாக்கத்தை சேர்ந்த கண்ணன் (43) என்பவர் எதிர்பாராத விதமாக எனது பைக் மீது விழுந்துவிட்டார். அதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, காயமடைந்த கண்ணனின் நண்பர்கள் 10 பேர் அங்கு வந்து, சிகிச்சைக்கு ₹1 லட்சம் கேட்டு மிரட்டினர்.