சூறைக்காற்றுக்கு பள்ளி கூரை சேதம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சூறை காற்றுடன் பெய்த மழைக்கு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மேற்கூரை மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. நேற்று மாலை இப்பகுதியில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறை காற்றுக்கு பள்ளி மேற்கூரை மீது அருகில் உள்ள வேப்பமரத்தின் கிளை ஒடிந்து விழுந்தது. இதில் பள்ளியின் ஓடுகள் நொறுங்கி வகுப்பறைக்குள் விழுந்தன. பள்ளி நேரம் முடிந்து மாணவ, மாணவிகள் வீட்டிற்கு சென்றதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Related Stories: