சென்னை : குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வேலூர், தி.மலை, கோவை, நீலகிரி, தேனீ உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்