ராமநாதபுரம்: போதையில் லஞ்சம் கேட்ட தொண்டி காவல்நிலைய காவலர் ராம்குமார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொண்டி காவலர் ராம்குமார் கள் குடித்துவிட்டு லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை காவலர் ராம்குமார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.