ஜகார்தா; இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது. புவியியல் அமைப்பின்படி பூமியின் ‘நெருப்புக் கோளம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது . இதனால், அந்நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அதன் அடிப்படையில் பாலி பிராந்திய பகுதியில் 00.18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் எதிரொலியாக கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்தன.