சென்னை: சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மானியக்கோரி க்கையின் போது எதிர்க்கட்சி துணைதலைவர் துரைமுருகன் பேசியதாவது: நெடுஞ்சாலைத்துறையில் 3 தலைமை பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. கடந்த 2018-19ல் 9741 கோடி திட்டபணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதில், 7363 கோடிதான் செலவிட ப்பட்டுள்ளது. 1,878 கோடி சரண்டர் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : பல்வேறு பிரச்னை காரணமாக திட்டப்பணிகளை தொடங்குவதில் சிக்கல் உள்ளது. அதனால், தான் குறிப்பிட்ட காலங்களில் பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்படுகிறது. துரைமுருகன் : பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.