பல்ராம்பூர்: உத்தரப் பிரதேசத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் 50 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டம் நயாநகர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் சுமார் 60 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மழை பெய்த நிலையில், பள்ளி கட்டிடம் ஈரப்பதமாக இருந்துள்ளது. வகுப்பறையில் சாக்குபை போடப்பட்டு, மாணவர்கள் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். அப்போது திடீரென உயர் அழுத்த மின் கம்பி அறுந்து, பள்ளி கட்டிடத்தின் அருகில் உள்ள மரத்தின் மீது விழுந்துள்ளது. மரம் பள்ளி கட்டிடத்தை தொட்டுக் கொண்டிருந்தது.