பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியர் சுட்டுக்கொலை

ஜம்மு: காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற நபரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் எஸ்எம் புரா நிலை அருகே எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அவரை எச்சரித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து முன்னேறியதால் எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த நபர் கொல்லப்பட்டார். சடலம் மீட்கப்பட்டு எஸ்எம் புரா எல்லையில் உள்ள ராணுவ நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் தீவிரவாதியா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related Stories: