தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நேற்று அளித்த பேட்டி: தேர்தல் நேரத்தில், மக்களுக்கு எதிரான திட்டங்களை எடப்பாடி அரசு செயல்படுத்தாது. தற்போது சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்து, 9 சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு, ஆட்சி நீடிக்கும் என்பதால், 8 வழிச்சாலை போன்ற திட்டங்களை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார். இதற்கு மக்கள் நிச்சயம் ஒரு முடிவு கட்டுவார்கள். கட்சியை பதிவு செய்த பிறகு, ஒரே சின்னம் கிடைத்த பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவோம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.