திருச்சி: தூர்வாரும் பணி நடக்காமலே நடந்ததாக முறைகேடு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் குளத்தில் இறங்கி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது பாப்பான்குளம். சுமார் 60 ஏக்கர் பரப்புள்ள இந்த குளம் மூலம் 300 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த 2017-18ல் இந்த குளத்தில் 3 கட்டமாக சீரமைப்பு பணிகள் நடந்ததாக அங்கு போர்டு வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு பல லட்சங்கள் செலவிடப்பட்டதாகவும் அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த குளத்தில் தூர்வாரும் பணி, கரையை பலப்படுத்தும் பணி, மதகுகள் சீரமைப்பு உள்ளிட்ட எந்த பணியும் நடைபெறவில்லை.