×

பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்து 2 பேர் பலி

அகமதாபாத்: குஜராத்தில் பொழுதுப்போக்கு பூங்காவில் ராட்சத ராட்டினம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 27 பேர் காயமடைந்தனர். குஜராத்தின் அகமதாபாத்தில் கன்காரியா அட்வென்சர் பொழுதுபோக்கு பூங்காவில் நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது, தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, அந்தரத்தில் உயரும் ராட்சத ராட்டினத்தில் சுமார் 30 பேர் ஏறி உள்ளனர். ராட்டினம் மேலே சென்றபோது, திடீரென கேபிள் கம்பிகள் அறுந்ததில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ராட்டினத்தில் இருந்த மணாலி ராஜ்வாடி (24), முகமது ஜாவேத் (22) ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 27 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் ருபானி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பொழுதுபோக்கு பூங்காவின் நிர்வாக மேலாளர் உட்பட 6 பேர் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Tags : Amusement Park, Rotunda, 2 killed
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...