×

வேலூர் மக்களவை தொகுதிக்கு மேலும் 6 பேர் மனுத்தாக்கல்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கியது.வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல்  நாளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 7 பேர் மனுத் தாக்கல் செய்தனர். 2ம் நாளில் 3 பேர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது. நேற்று  தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நரேஷ்குமார், முன்னாள் தாசில்தார் செல்வராஜ், தேசிய மக்கள் கழகம் சார்பில் திவ்யா, இந்திய குடியரசு கட்சி (ஆர்பிஐ) சார்பில் ஆறுமுகம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில்  பலராமன், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, முற்போக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் கணேசன் யாதவ் ஆகிய 6 பேர் மனுத்தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் நாளை மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vellore, Lok Sabha ,constituency, appealing
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு