சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் வேலூர் மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. வேலூர் மக்களவை ெதாகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். தேர்தலில் திமுக சார்பில் பணியாற்றிட நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பணிப்பொறுப்பாளர்கள் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக துணை பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுக முன்னணியினர் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.