உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பிரேமலதா கூறினார்.கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தது. ஆனால் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதில் தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.இதனால் உள்ளாட்சித் தேர்தலில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று அதிமுக தொண்டர்கள் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஆனால் பாமக கண்டிப்பாக அதிமுக கூட்டணியில் தொடரும் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் அறிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில், ‘‘உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக-தேமுதிக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். மேலும் தேர்தலில் மீண்டும் பணப்பட்டுவாடா  புகார் எழுந்தாலும் தேர்தலை ரத்து செய்வதை விடுத்து, வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: