சென்னை: கொரட்டூர் சீனிவாசபுரம், முதல் பிரதான தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (44). சிறப்பு பிரிவு சிஐடியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர், ேநற்று முன்தினம் இரவு பணி முடிந்து வடபழனி 100 அடி சாலை வழியாக மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். கோயம்பேடு அருகே சென்றபோது, பின்னால் மின்னல் வேகத்தில் ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் திடீரென இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மொபட் மீது மோதிவிட்டு தப்பினர். இதில் மகாலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்து, 5 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.