லண்டன்: ஈரான் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் விடுவிக்கப்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பின் தடையை மீறி சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானுக்கு சொந்தமான சூப்பர் டேங்கர் கிரேஸ் 1 கப்பலை, ஜிப்ரால்டர் ஜலசந்தியில் இங்கிலாந்து கடற்படை சிறைப்பிடித்தது. இதன் காரணமாக ஈரான் மற்றும் இங்கிலாந்து இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், நிபந்தனையின் பேரில் ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிப்பதற்கு இங்கிலாந்து முன்வந்துள்ளது.