காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக போலீஸ் எஸ்ஐ: கிராமமே கொண்டாட்டம்

சமோவ்: புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர் அனுராதா. இவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தொகூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ உடல் எடைப் பிரிவில் ‘ஸ்னாச்’ முறையில் 100 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 121 கிலோ என மொத்தம் 221 எடை தூக்கி தங்க பதக்கம்வென்றார்.

பளுதூக்கும் போட்டியில் தொடக்க காலத்தில் தமிழகத்தில் பயிற்சி பெற்ற அனுராதா, பின்னர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில்சிறப்பு பயிற்சியை பெற்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறுதரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு 2009ல் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் அனுராதா தங்கம் வென்றதுகுறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து கூறுகையில், ‘‘பல தடைகளை கடந்து தான் அனுராதா இந்த சாதனையை படைத்துள்ளார். பெண் பிள்ளைஎன்பதால் அவரை பளு தூக்கும் போட்டிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தினார்கள். ஆனால் தங்கையின் ஆசையை நிறைவேற்றவே நானும்அம்மாவும் கூலி வேலை செய்து அவரை பயிற்சிக்கு அனுப்பினோம்’’ எனக் கூறினார். எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்கும் அனுராதா, பளு தூக்கும் போட்டிக்காவே, என்.ஐ.எஸ் என்ற ஒருவருட படிப்பை பஞ்சாபில் படித்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் அனுராதா தங்கம் வென்று இருக்கும் நிலையில் அரசின் உதவிகள் கிடைத்தால் அடுத்து வருகின்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர்நிச்சயம் தங்கம் வெல்வார் என அனுராதாவின் குடும்பத்தினர், ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: