ஏடிஎம்மில் கண்டெடுத்த ரூ.5 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த மெக்கானிக்

பெரியகுளம்: பெரியகுளத்தில் ஏடிஎம்மில் கண்டெடுத்த ரூ.5 லட்சத்தை போலீசில் மெக்கானிக் ஒப்படைத்தார். தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை குட்டியப்பர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். போடியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் அவர் நேற்றுமுன் தினம் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு கேட்பாரற்று 500 ரூபாய் நோட்டு கட்டுகள் கிடந்தன. சரிபார்த்த போது, 10 கட்டுகளில் ரூ.5 லட்சம் இருப்பது தெரியவந்தது.

இந்த பணத்தை பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சுரேஷிடம் மணிகண்டன் ஒப்படைத்தார். அவரை பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தேனி எஸ்பி பாஸ்கரனிடம் அழைத்து சென்றனர். கேட்பாரற்று கிடந்த ரூ.5 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த மணிகண்டனின் நேர்மையை எஸ்பி பாராட்டினார்.

Related Stories: