மேட்டூர்: மேட்டூர் அருகே சாலையை சீரமைக்க கோரி, அரசு பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கோனூர் ஊராட்சியில் ஆண்டிக்கரை, கல்லுக்கிணறு, மல்லக்கவுண்டர்தெரு, மங்கானூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். கிராம மக்களின் வசதிக்காக தினமும் அப்பகுதியில் 5 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கிராமங்களுக்கு ெசல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அரசு பேருந்துகள் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். தொடர்ந்து டூவீலரிலும் செல்ல முடியாத நிலையும் நிலவுகிறது.