தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேர் கோவையில் கைது

கோவை : தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது கோவையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் கருப்புக்கடை கீழமேடு, உக்கடம் ஆகிய இடங்களில் இன்று காலை மாநகர போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆட்டோ பைசல், சதாம் உசேன், அப்துல் ரகுமான் ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஒரு செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் 3 பேரையும் கைது செய்த பெரியகடை வீதி போலீசார், 153,505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் தடைச் செய்யப்பட்ட அமைப்புகளுடன் சமூக வலைத்தளங்களில் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கோவையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories: