கோவை : தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது கோவையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் கருப்புக்கடை கீழமேடு, உக்கடம் ஆகிய இடங்களில் இன்று காலை மாநகர போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆட்டோ பைசல், சதாம் உசேன், அப்துல் ரகுமான் ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஒரு செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.