புதுடெல்லி,: ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி வரும் 2024-25 நிதியாண்டில் ₹35,000 கோடியை தாண்டும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி வரும் 2024-25 நிதியாண்டில் ₹35,000 கோடியை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி துறை செயலாளர் அஜய் குமார் கூறியதாவது: ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி ₹10,700 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இலக்கு ₹20,000 கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் ₹5,600 கோடி மதிப்பிலான தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுவே சாதனை அளவுதான்.