போதைப்பொருள் விற்றவர் கைது

சென்னை: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்ற புதுப்பேட்டை பி.வி.கோயில் முதல் தெருவை சேர்ந்த பிரந்தர் திவாரி (49), என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் (43), சென்னை முகப்பேரில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கம்பெனியில் பணியாற்றினார். இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில் விடுதி மாடிக்கு செல்ல முயன்றபோது, படிக்கட்டில்  இருந்து தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.

* வளசரவாக்கம் ஜானகி நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் செல்போன்களை திருடிய மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (எ) கொக்கி குமார் (21), லட்சுமணன் (21)  ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* அனகாபுத்தூர் அயோத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முனுசாமி மனைவி தமயந்தி (45), கடந்த 2 நாட்களுக்கு முன் மாயமான நிலையில், நேற்று அனகாபுத்தூர் காமராஜபுரம் கல்குவாரி குட்டையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது.  போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories: