செக் குடியரசில் நடைபெறும் கிளாட்னோ தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் முகமது அனாஸ், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார். 45.21 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்த அனாஸ், தனது தேசிய சாதனையையும் (45.24 விநாடி) முறியடித்தார். உலக சாம்பியன்ஷிப் ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான தகுதி 45.30 விநாடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் தோஹாவில் செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.